ஆகஸ்ட் 14-ந் தேதி ஒரே நாளில் ரூ.273 கோடிக்கு மது விற்பனை.
சுதந்திர தின விழாவையொட்டி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு 15 ஆம்தேதி விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் அதற்கு முந்தைய தினமான ஆகஸ்ட் 14-ந் தேதி டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை களைக்கட்டியாது.வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது. அதன்படி, டாஸ்மாக் கடைகளில் ஆகஸ்ட் 14-ந் தேதி ஒரே நாளில் ரூ.273 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.58.26 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ரூ.55.77 கோடியும், சேலத்தில் ரூ.54.12 கோடியும், திருச்சியில் ரூ.53.48 கோடியும், கோவையில் ரூ.52.29 கோடியும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
Tags :