ஒரு லட்சம் செலுத்தினால் ஓராண்டில் 2 லட்சம் தருவதாக கூறி பண மோசடி போலீசார் விசாரணை

by Editor / 17-08-2022 04:48:48pm
ஒரு லட்சம் செலுத்தினால் ஓராண்டில் 2 லட்சம் தருவதாக கூறி பண மோசடி போலீசார் விசாரணை

 சேலம் அருகே ஒரு லட்சம் பணம் செலுத்தினால் ஓராண்டில் இரண்டு லட்சமாக திருப்பி தருவதாக கூறி பண மோசடி செய்த நிறுவனரை முதலீட்டாளர்கள் பிடித்து தாக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது. சேலத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் நடத்தி வரும் ஜஸ்ட் வீன் ஐ டி டெக்னாலஜி இந்தியா என்ற நிறுவனத்தின் அந்த கவர்ச்சிகரமான அறிவிப்புகளை நம்பி ஆயிரக்கணக்கான மக்கள் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. நிறுவனத்தின் வேலூர் கிளையில் மற்றும் 40 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யப்பட்ட நிலையில் பாலசுப்பிரமணியன் மூன்று ஆண்டுகளாக தொகையை திருப்பி தராததால் ஆத்திரமடைந்த வேலூர் கிளை முதலீட்டாளர்கள் சேலம் வந்து பாலசுப்பிரமணியம் தாக்க முயன்றனர். அப்போது அங்கு வந்த பாலசுப்பிரமணியத்தின் அடியாட்களும் வேலூர் முதலீட்டாளர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து அடியாட்கள் பாலசுப்பிரமணியத்தின் ஆட்டோவில் அழைத்துச் சென்ற நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via