மதுரை பாண்டியன் உணவகத்தில் வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட காடை வறுவல் புழுக்கள்

by Editor / 17-08-2022 04:45:54pm
மதுரை பாண்டியன் உணவகத்தில் வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட காடை வறுவல் புழுக்கள்

ஆரணியில் உள்ள மதுரை பாண்டியன் உணவகத்தில் வாடிக்கையாளர்கள் வழங்கப்பட்ட கடைகளில் புழு இருந்ததாக எழுந்த புகார் குறித்து உணவு பாதுகாப்பு துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் இந்த உணவகத்துக்கு சென்ற ஒருவர் காடை வறுவல் ஆர்டர் செய்து உள்ளார். அவருக்கு வழங்கப்பட்ட காடையில் புழு இருந்ததாக கூறப்படும் நிலையில் .அந்த நபர் ஹோட்டல் நிர்வாகத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் ஹோட்டலுக்கு  வந்த ஆய்வு மேற்கொண்ட உணவுப் பாதுகாப்புத் துறையினர் புழு இருந்ததாக கூறப்படும் உணவே ஆய்வுக்கு அனுப்பி வைத்த உள்ளன முடிவுகள் வந்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via