கொட்டும் மழையில் திரண்டுவந்து பொதுமக்கள் பிரதமருக்கு வரவேற்ப்பு

by Editor / 01-09-2022 10:38:35pm
கொட்டும் மழையில் திரண்டுவந்து பொதுமக்கள் பிரதமருக்கு வரவேற்ப்பு

கேரளாவின் எர்ணாகுளம்  நகரில் மெட்ரோ ரெயில் 2-வது கட்ட பணிகள் மற்றும்கேரளமாநிலத்தில் பல்வேறு  திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக  பிரதமர் மோடி எர்ணாகுளம் வந்தடைந்தார். பிரதமர் வருகையை முன்னிட்டு, வழியெங்கும் மக்கள் கூட்டம் திரண்டிருந்தது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை காலமென்பதால் கனமழை  பெய்து வரும் சூழலில், பிரதமர் விழா மேடைக்கு செல்லும் பாதையில் கொட்டும் மழைக்கு இடையிலும், ஏராளமான மக்கள் குடைகளை பிடித்தபடியும்,  மழையில் நனைந்தபடியும் அவரை காண நீண்ட காத்திருந்தனர். பிரதமரின் வருகையை முன்னிட்டு எர்ணாகுளத்தின் முக்கிய வீதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

 

Tags :

Share via