கேதார்நாத் யாத்திரை பாதையில்  நிலச்சரிவு 13 பேர் மாயம்.

by Editor / 04-08-2023 07:06:52pm
கேதார்நாத் யாத்திரை பாதையில்  நிலச்சரிவு 13 பேர் மாயம்.

உத்தராகாண்ட் மாநிலத்தில் கேதார்நாத் யாத்திரை செல்லும் பாதையில் நேற்றிரவு பெய்த கனமழையால் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டதில் 13 பேர் காணாமல் போயுள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) மூலம் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தொடர் கனமழை காரணமாக மலைப்பகுதிகளில் இருந்து ஆங்காங்கே விழும் பாறைகளால் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்கு இடையூறாக இருப்பதாக பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via