14 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன்மழை பெய்ய வாய்ப்பு

by Editor / 04-09-2022 10:21:39am
14 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு  இடி, மின்னலுடன்மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், வடதமிழக பகுதிகளின் மேல், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்றும் நாளையும் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி தருமபுரி, சேலம், கரூர், நாமக்கல், திருப்பத்தூர், மதுரை, திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்" என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Tags :

Share via