மனைவியிடம் ஆபாசம்.. தம்பியை கார் ஏற்றி கொலை செய்த அண்ணன்.

by Editor / 09-09-2022 03:44:04pm
மனைவியிடம் ஆபாசம்.. தம்பியை கார் ஏற்றி கொலை செய்த அண்ணன்.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஸ்வரலு. இவரது தம்பி ஏடு கொண்டலு. சகோதரர்களான இவர்கள் இருவருக்கும் இடையே சொத்து பிரிப்பதில் தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சொத்து பிரிப்பது தொடர்பாகப் பேச அண்ணன் வீட்டிற்குத் தம்பி சென்றுள்ளார். அப்போது வெங்கடேஸ்வரலு வீட்டில் இல்லாததால் அவரது மனைவியிடம் தகராறு செய்துள்ளார். மேலும் அவரை ஆபாசமாகத் திட்டியுள்ளார். பிறகு ஏடு கொண்டலு அங்கிருந்து சென்றுள்ளார்.

இதையடுத்து வீட்டிற்கு வந்த மனைவி நடந்தவற்றைக் கணவனிடம் தெரிவித்துள்ளார். மனைவியை ஆபாசமாகத் திட்டியதால் தம்பியைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். இதன்படி நேற்று ஏடு கொண்டலு சாலையில் நடந்து சென்றபோது அவர் மீது அண்ணன் வெங்கடேஸ்வரலு கார் ஏற்றி கொலை செய்துள்ளார். சொந்த தம்பியை அண்ணனே கார் ஏற்றி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via