சென்னையில் 37 பள்ளிகளில் காலை இலவச சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி திட்டமிட்டம்.

by Editor / 13-09-2022 09:46:46pm
சென்னையில் 37 பள்ளிகளில்  காலை இலவச சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி திட்டமிட்டம்.

முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்த நாளான வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி, காலை இலவச சிற்றுண்டி திட்டத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மதுரையில் தொடங்கி வைக்க உள்ளார். சென்னை உட்பட 14 மாநகராட்சிகளில் 318 பள்ளிகளில் 37,740 மாணவ மாணவியர், மேலும் 23 நகராட்சிகளில் அமைந்துள்ள 163 பள்ளிகளில் 17,427 மாணவ மாணவியர் என தமிழ்நாடு முழுவதும் 1.14 லட்சம் மாணவர்களிடம் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சியை பொறுத்த வரையில் வரும் 16 ஆம் தேதி முதல் இந்த காலை இலவச சிற்றுண்டி திட்டம் அமலுக்கு வர உள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் 37 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான 5941 மாணவ மாணவியருக்கு பரிட்சார்த்த முறையில் சிற்றுண்டி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via