சுப்புலட்சுமி ஜெகதீசன் அரசியலில் இருந்து ஓய்வு

by Staff / 20-09-2022 12:10:20pm
சுப்புலட்சுமி ஜெகதீசன் அரசியலில் இருந்து ஓய்வு

திமுக துணைப்பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதியே முதலமைச்சர் ஸ்டாலினிடம் விலகல் கடிதம் அளித்துவிட்டதாக இன்றைய தேதியிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், "2009ஆம் ஆண்டிற்கு பிறகு இனி தேர்தலில் போட்டியிடாமல் கட்சி பணிகளை மட்டுமே மேற்கொள்வதாக முன்னாள் முதல்வர் கருணாநிதியிடமே தெரிவித்திருந்தேன். அரசியலில் இருந்து ஓய்வுபெற வேண்டும் என்பது எனது நீண்ட நாள் விருப்பம்" என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via