.3.5 கோடிக்கு லாட்டரி வாங்கி வெறும் ரூ.5000 பெற்ற விவசாயி ராகவன்

by Staff / 21-09-2022 04:44:12pm
.3.5 கோடிக்கு லாட்டரி வாங்கி வெறும் ரூ.5000 பெற்ற  விவசாயி ராகவன்

கேரளா: கண்ணூரில் உள்ள கரிவள்ளூரை சேர்ந்தவர் விவசாயி ராகவன். இவர் தனது 18 வயது முதல் அதாவது 1970-ம் ஆண்டிலிருந்து லாட்டரிச்சீட்டு வாங்கத் தொடங்கினார். அன்றிலிருந்து இதுவரை ராகவன் டிக்கெட் வாங்குவதை நிறுத்தவில்லை. தினமும் 10 டிக்கெட்டுகள் வரை வாங்கும் அவர் அவை அனைத்தையும் பாதுகாப்பாக வைத்துள்ளார். இவர் கடந்த 52 ஆண்டுகளில் லாட்டரி சீட்டுக்கு மட்டும் ரூ.3.5 கோடி செலவிட்டுள்ளார். கோடிக்கணக்கில் செலவழித்து டிக்கெட் வாங்கியிருந்தாலும், அவர் பெற்ற அதிகபட்ச பரிசுத்தொகையே ரூ.5,000 ஆகும். இருப்பினும், அந்த நபர் மனம்தளராமல் மேலும் லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கத்தை தொடர்ந்து வருகிறார்.

 

Tags :

Share via