கணவனை விஷ ஊசி போட்டு கொலை செய்த மனைவி

by Staff / 22-09-2022 12:05:13pm
 கணவனை விஷ ஊசி போட்டு கொலை செய்த மனைவி

ஆந்திர மாநிலம் கம்பம் மாவட்டம், சித்தகானி பகுதியை சேர்ந்த ஷேக் ஜமால் சாயபு. இவரது மனைவி ஷேக் இமாம் பீ (46). தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி வெவ்வேறு ஊர்களில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இமாம் பீ-க்கும், அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மோகன் ராவ் என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்தது.

இமாம் பீ, மோகன் ராவுடன் வீட்டில் தனிமையில் இருந்தபோது அவரது கணவர் ஷேக் ஜமால் சாயபு பார்த்துவிட்டார். ஆத்திரமடைந்த அவர் மனைவியை கண்டித்துள்ளார். இதனால், மனைவி இமாம் பீ கணவரை கொலை செய்ய திட்டமிட்டு,
தனியார் மருத்துவமனையில் ரூ.3500 கொடுத்து 2 ஊசிகளை வாங்கியுள்ளார். இமாம் பீயிடம் ஒரு ஊசியும், மோகன் ராவிடம் ஒரு ஊசியும் வைத்துக்கொண்டனர். இமாம் பீ, மோகன் ராவுடன் சேர்ந்து, அவரது நண்பர்கள் வெங்கண்ணா, வெங்கடேஷ், யஸ்வந்த், சாம்பசிவ ராவ் ஆகியோருடன் சேர்ந்து கணவரை விஷ ஊசி செலுத்தி கொலை செய்தார். பின்னர் போலீசார் விசாரணையில், இமாம் பீ செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது அவர் அடிக்கடி மோகன் ராவிடம் பேசியது தெரிய வந்தது. இதையடுத்து 6 பேரை கைது செய்தனர்.

 

Tags :

Share via