மோடியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உரைகள்; புத்தகத்தை வெளியிடும் வெங்கையா நாயுடு

by Staff / 23-09-2022 03:29:25pm
மோடியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உரைகள்; புத்தகத்தை வெளியிடும் வெங்கையா நாயுடு

பிரதமர் நரேந்திர மோடியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உரைகளின் தொகுப்பை முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு வெளியிடுகிறார். 'சப் கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ் - பிரதமர் நரேந்திர மோடி பேசுகிறார் (மே 2019 - மே 2020)' என்ற புத்தகம் வெளியிடப்படுகிறது.

கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் முன்னிலையில் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. இந்தப் புத்தகத்தில் பல்வேறு தலைப்புகளில் பிரதமர் ஆற்றிய 86 உரைகள் உள்ளன. இந்த விழாவை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.

கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் மற்றும் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோர் முன்னிலையில் புத்தகத்தை வெளியிடுவது பெருமையாக உள்ளது என்று வெங்கையா நாயுடு கூறினார்.புதிய இந்தியா குறித்த பிரதமரின் கருத்துகள் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புத்தகம் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் வெளியாகிறது.
 

 

Tags :

Share via