ஈரப்பதம் அதிகம் உள்ள நெல்லை கொள்முதல் செய்த ஊழியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்.

by Editor / 30-09-2022 04:46:41pm
ஈரப்பதம் அதிகம் உள்ள நெல்லை கொள்முதல் செய்த ஊழியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்.

திருவாரூர் மாவட்டம் ஊர் குடி கிராமத்தில் நேற்று 29 ஆம் தேதி உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஆய்வு செய்தார் அப்பொழுது 17 சதவீதம் ஈரப்பதற்கும் அதிகமாக உள்ள நெல்லை கொள்முதல்  செய்ததை நேரடியாக அமைச்சர் கண்டுபிடித்தார். அதனையடுத்து கொள்முதல் நிலையத்தில் பணியாற்றிய பட்டியல் எழுத்தர் செல்வகுமார் மற்றும் உதவியாளர் பழனி ஆகிய இரண்டு பேரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்

 

Tags :

Share via