வயிற்று வலி தாங்க முடியாமல் எலி பேஸ்ட் சாப்பிட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நச்சலூர் வஉசி தெரு பகுதியைச் சேர்ந்தவர் மகாமுனி மனைவி தனலட்சுமி (30). இவருக்கு மாதவிலக்கு காலங்களில் வயிற்று வலி அதிகமாக உள்ளதால், மருத்துவ சிகிச்சை செய்து வந்துள்ளார். வயிற்று வலி அதிகமாகி வந்த காரணத்தால் வீட்டிலிருந்த எலி பேஸ்டை சாப்பிட்டு விட்டு யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்துள்ளார். வலி அதிகமாக இருப்பதை கண்டு உறவினர்கள் மருத்துவரிடம் கூட்டிச் சென்று பரிசோதித்து விசாரித்த போது தான் அவர் எலி பேஸ்ட்டை நான்கு நாட்கள் முன்னரே சாப்பிட்டு விட்டார் என தெரியவந்தது. அதனை அடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தனலட்சுமி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இது குறித்து தனலட்சுமி சகோதரர் சக்திவேல் அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :