தமிழ்நாட்டில் புதிதாக 461 பேருக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் இன்று புதிதாக 461 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 97 பேர், செங்கல்பட்டில் 40 பேர், கோவையில் 31 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 537 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழப்பு ஏதும் இன்று இல்லை. தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி 5 ஆயிரத்து 415 பேர் மட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags :