சென்னையில் இருந்து கடலூர் நோக்கி சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள தபால் மேடு என்ற இடத்தில் சென்னையில் இருந்து கடலூர் நோக்கிச் சென்ற இண்டிகா கார் அதிகாலை 4 மணி அளவில் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் என தீப்பிடித்து எறிந்தது. இதில் காரை ஓட்டி வந்த ரீகன் என்பவர் கார் தீப்பிடித்ததை அடுத்து கீழே இறங்கியதால் எந்தவித உயிர் அசம்பாவிதம் இல்லை இந்த விபத்து குறித்து படாளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Tags :