விமானம் அவசரமாக தரையிறக்கம்

by Staff / 15-10-2022 03:45:13pm
 விமானம் அவசரமாக தரையிறக்கம்

மும்பையில் பறக்கும் போது பறவை மீது மோதிய ஆகாசா ஏர் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இன்று காலை மும்பையில் இருந்து பெங்களுருவுக்கு புறப்பட்ட ஏ.கே.ஜே. 1103 என்ற விமானம் மும்மையில் மீண்டும் தரையிறங்கியது.பயணத்திற்கிடையே கேபினில் கருகிய வாசனை வெளியேறியதை தொடர்ந்து அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது. பரிசோதனையில் ஒன்றாவது என்ஜினில் பறவையின் உடல் உறுப்புகள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.என்ஜினில் பறவை மோதியதை தொடர்ந்து கருகிய வாசனை வெளியானதாகவும் டிஜிசிஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Tags :

Share via