அரசு மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய திமுகவினர்போலீசார் வழக்கு.
நாகை; பெரிய கடைத் தெருவில் வசித்து வருபவர் திருவருள் கமல ஆறுமுகம்; அரசு சித்தா டாக்டர். இவரது வீட்டின் வாசல் பகுதியில், பழக்கடை நடத்தி வரும் மணிமாறனுக்கும் இவருக்கும் இடப்பிரச்னை இருந்துள்ளது. இது குறித்து நாகை டவுன் போலீஸ் ஸ்டேஷனில் திருவருள் கமல ஆறுமுகம் புகார் அளித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மணிமாறன், திமுக நிர்வாகி பாபு(52) மற்றும் சிலருடன் சனிக்கிழமை மாலை, கிளினிக்கிற்குள் புகுந்து திருவருள் கமல ஆறுமுகம், அவரது தாய் சாந்தி ஆகியோரை கடுமையாக தாக்கினார். இது தொடர்பான 'சிசிடிவி' காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நாகை டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Tags :