சூட்கேஸில் பெண்ணின் நிர்வாண உடல் வீசப்பட்டதால் பரபரப்பு
டெல்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் ஒரு சூட்கேஸில் பெண்ணின் நிர்வாண உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சூட்கேஸில் அடையாளம் தெரியாத பெண்ணின் நிர்வாண உடல் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். பெண்ணின் கழுத்தை நெரித்து கொன்று சடலம் வீசப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். குருகிராமில் உள்ள IFFCO சவுக் அருகே வீசப்பட்ட நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
பிரேத பரிசோதனையில் அந்த பெண் கழுத்தை நெரித்து கொன்ற பின்பு சூட்கேஸில் வைத்து விட்டு சென்றது தெரியவந்தது. பெண்ணின் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது என்று மேற்கு டிசிபி தீபக் சஹாரன் கூறினார்.சடலத்தின் இடுப்பில் சில தீக்காயங்கள் காணப்படுவதாகவும், அந்தரங்க பாகங்களில் சிதைந்த அடையாளங்கள் காணப்படுவதாகவும் மருத்துவர் தெரிவித்தார்.மாலை 4 மணியளவில், இஃப்கோ சௌக் அருகே சாலையோர புதருக்குள் சந்தேகத்திற்கிடமான சூட்கேஸ் கிடப்பதைப் பற்றி ஒரு ஆட்டோ ஓட்டுநர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
Tags :