அரசியல் ஆதாயம் தேட பாஜக முயற்சி - திருமாவளவன்
தொல். திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கோவை கார் வெடிப்பு சம்பவம் மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. இந்த விவகாரத்தில் பன்னாட்டு பயங்கரவாத தொடர்பு இருக்கும் என காவல்துறை அஞ்சுகிறது. எனவே இந்த விவகாரத்தை தேசிய புலனாய்வு முகமை விசாரிப்பதே சரியானது, பொருத்தமானது. ஆனால், தேசிய புலனாய்வு முகமை சுதந்திரமாக செயல்பட வேண்டும். எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் மதத்தின் பெயரால் பயங்கரவாதத்தை கையிலெடுப்பது ஏற்புடையது அல்ல. இத்தகைய நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். இதற்கு மாநில அரசு ஒத்துழைப்பு வழங்கியிருப்பது வரவேற்கத்தக்கது.
இந்த விவகாரத்தை தேசிய புலனாய்வு முகமை கையிலெடுத்திருக்கும் நிலையில், பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், பாஜக கடையடைப்பு போராட்டம் நடத்துவதாக சந்தேகம் எழுந்துள்ளது. கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விவகாரத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட அனைத்து முயற்சிகளையும் பாஜக மேற்கொள்ளும். தமிழ் மொழிக்காக பாஜக நடத்தும் போராட்டம் ஆடு நனைகிறதே என ஓநாய் கவலைப்படுவது போல் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Tags :