புர்காவில் நெய்யப்பட்டிருந்த ஜரிகையில்  24 கேரட் சுத்தமான தங்கம் கடத்தல் -பெண்ணிடம் விசாரணை.

by Editor / 05-11-2022 07:45:29pm
புர்காவில் நெய்யப்பட்டிருந்த ஜரிகையில்  24 கேரட் சுத்தமான தங்கம் கடத்தல் -பெண்ணிடம் விசாரணை.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நாளுக்கு நாள் தங்கம் கடத்தல் அதிகரித்துக் கொண்டு செல்கிறது. மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து குருவிகள் மூலம் பல கோடி மதிப்பிலான தங்க நகைகள் இங்கு கடத்தி வரப்படுகிறது. இந்தக் கடத்தலில் கல்லூரி மாணவர்களும் தங்களை ஈடுபடுத்தி வாழ்வை தொலைத்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று துபாயில் இருந்து இன்டிகோ விமானத்தில் திருச்சி விமான நிலையத்திற்கு வந்த பெண் பயணி அவர் அணிந்து வந்த புர்காவில் நெய்யப்பட்டிருந்த ஜரிகைகளை சோதனை செய்ததில்  24 கேரட் சுத்தமான தங்கம்  என கண்டுபிடிக்கப்பட்டது.சுங்கத்துறை அதிகாரிகள் அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via