களைக்கட்டிய கருமுட்டை,குழந்தைகள் வியாபாரம்-3 பேர் கைது.

by Editor / 08-11-2022 10:22:59pm
களைக்கட்டிய கருமுட்டை,குழந்தைகள் வியாபாரம்-3 பேர் கைது.

சேலம் சீலநாயக்கன்பட்டி ரவுண்டானா பகுதியில் சட்டவிரோதமாக பச்சிளம் பெண் குழந்தை விற்பனை சம்பவம் நடைபெற்றது. இதனை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். 
குழந்தையை எடுத்து வந்த இடைத்தரகர்கள் வளர்மதி அவரது கணவர் மதியழகன் மற்றும் லதா ஆகிய மூவரையும் கைது செய்தனர்.இந்த மூவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்ட ஈரோடு பகுதியை சேர்ந்த லதா என்பவர் சுதா மருத்துவமனையில் கருமுட்டை விற்பனை இடைத்தரகராக இருந்துள்ளார். இதே மருத்துவமனையில் இடைத்தரகராக இருந்த நாமக்கல் பகுதியை  சேர்ந்த மற்றொரு பெண்ணான வளர்மதியும் கருமுட்டை கொடுத்து வந்துள்ளார்.

அப்பொழுது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு குழந்தை மற்றும் கருமுட்டை விற்பனை ஆகிய சட்டவிரோத தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.இருவரும் இதே பகுதியில் உள்ள பல பெண்களை அழைத்து சென்று கருமுட்டை விற்பனைக்கு உட்படுத்தி உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவர்கள் இருவரும் ஐந்திற்கும் மேற்பட்ட பெண்களை அழைத்து சென்று கருமுட்டை விற்பனை கொடுக்க வைத்து ஒரு முறை கருமுட்டை கொடுப்பதற்கு ₹20 ஆயிரம்  வீதம் கருமுட்டை கொடுப்பவர்களுக்கு பணம் வாங்கி கொடுத்துள்ளனர். தொடர்ந்து இதையே  தொழிலாக செய்து வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. மேலும் பல மாவட்டங்களில் குழந்தைகள் இல்லாத தம்பதியினருக்கு குழந்தைகளை விற்பனைக்கு பேரம் பேசியதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது இவர்கள் மூவரிடமும் காவல்துறையினர் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.இவர்கள் மூலமாக கருமுட்டை வியாபாரம்,குழந்தைகள் விற்பனைகள் குறித்து காவல்துறையினர் தகவல்களை சேகரித்துவருகின்றனர்.

 

Tags : கருமுட்டை,குழந்தைகள் வியாபாரம்

Share via