திருவாரூர் மாவட்டத்தில் மழையால் 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்.

by Editor / 12-11-2022 09:13:26am
 திருவாரூர் மாவட்டத்தில் மழையால் 5 ஆயிரம்  ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்.

திருவாரூர் மாவட்டத்தில் வளிமண்டல கீழ் அடுக்கு மற்றும் வடகிழக்கு பருவமழை தொடக்கத்தின் காரணமாக கடந்த 10 நாட்களாக கன மழை பெய்து வருகிறது.அடுத்த இரண்டு நாட்கள் மழை இல்லாமல் இருந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் தற்போது வரை வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியினால் தொடர்மழை என்பது பெய்து வருகிறது.இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் 2535 ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி நெற்பயிர்களும் 873 ஏக்கர் பரப்பளவில் தாளடி நெற்பயிர்களும் மழைநீரில் மூழ்கி பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட வேளாண் துறை தகவல் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via