எஜனமாருக்காக உயிரை விட்ட 5 நாய்கள்

by Staff / 13-11-2022 04:27:44pm
எஜனமாருக்காக உயிரை விட்ட 5 நாய்கள்

மதுரை அலங்காநல்லூர் புதுப்பட்டியை சேர்ந்த மாணிக்கம் என்பவர் காட்டுப்பன்றி வேட்டைக்கு சென்றிருக்கிறார். அப்போது அவருடன் அவர் பாசமாக வளர்த்த 5 நாய்களும் சென்றிருக்கிறன. கொண்டையம்பட்டி எனும் பகுதியில் காட்டுப்பன்றியை வேட்டையாடியபோது, அங்கு அசோக்குமார் என்பவருக்கு சொந்தமான பூந்தோட்டத்தில் சட்டவிரோதமாக மின்வேலி அமைக்கப்பட்டிருந்தது. இதில் மாணிக்கம் தவறுதலாக கால் வைக்கவே அவரை மின்சாரம் தாக்கியுள்ளது. இதை பார்த்த நாய்கள், தன் எஜமானரை காப்பாற்ற மின் வேலியிடம் செல்ல, அவையும் ஒவ்வொன்றாக இறந்தன. இதில் மாணிக்கமும் உயிரிழந்த நிலையில், அப்பகுதியில் சோகம் நிலவி வருகிறது.
 

 

Tags :

Share via