மழை நீரை வெளியேற்ற இன்று விடுமுறை

by Editor / 17-11-2022 08:42:42am
மழை நீரை வெளியேற்ற  இன்று விடுமுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையினால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு நேற்று முன் தினம் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டிருந்தார் அம்மாவட்ட ஆட்சியர் லலிதா. நேற்று கடைமுக தீர்த்தவாரியை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில், சீர்காழி தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் தேங்கியிருக்கும் மழை நீரை வெளியேற்ற வேண்டி இருப்பதால் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via