3 மாத பெண் குழந்தை திடீர் சாவு

by Staff / 19-11-2022 12:51:48pm
3 மாத பெண் குழந்தை திடீர் சாவு

ஆட்டையாம்பட்டி நேருஜி தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 34). இவரது மனைவி தேவி. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தேவிக்கு பெண் குழந்தை பிறந்தது. நேற்று முன்தினம் வீட்டில் இருந்த கைக்குழந்தைக்கு பால் புகட்டும்போது திடீரென மூச்சுதிணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே குழந்தையை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். குழந்தை சாவு குறித்து ஆட்டையாம்பட்டி போலீசார் நேற்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

 

Tags :

Share via