லாரி சக்கரத்தில் சிக்கி ஒருவர் பலி

by Staff / 24-11-2022 04:27:18pm
லாரி சக்கரத்தில் சிக்கி ஒருவர் பலி

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள உப்பிலி பாளையத்தைச் சேர்ந்தவர் நந்தகோபால் (வயது 61), தொழிலாளி. இவர் இன்று காலை தனது மோட்டார் சைக்கிளில் உப்பிலிபாளையத்தில் இருந்து கோவையை நோக்கி திருச்சி ரோட்டில் வந்தார். அப்போது திருச்சி சாலையில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரி சந்திப்பு அருகே வந்தபோது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளில் வந்த நந்தகோபால் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி அவர் சாலையில் விழுந்தார். அப்போது லாரி சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியது.   சக்கரத்தில் சிக்கி நந்தகோபால் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோவை கிழக்குப் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.அவர்கள் நந்தகோபாலின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அந்த சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.அதனைப் போக்குவரத்து காவல்துறையினர் ஒழுங்குபடுத்தினர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

 

Tags :

Share via