சீனாவின் இந்த நடவடிக்கையால் உலக நாடுகள் கவலை
கொரோனாவால் உலகையே உலுக்கிய சீனா, தற்போது இன்னொரு ஆபத்தை கொண்டு வர காத்துக்கொண்டிருக்கிறது.சீனர்கள் பன்றி இறைச்சியை அதிகளவில் விரும்புவார்கள். அங்கு பன்றி இறைச்சிக்கு அதிக தேவை உள்ளது.மத்திய ஹூபே மாகாணத்தில் உள்ள Yizhou நகரம் புறநகர்ப் பகுதிகளில் மிகப்பெரிய பன்றி வளர்ப்பு மையத்தை அமைத்துள்ளது. இங்கு 26 மாடிகளில் 6,50,000 பன்றிகள் வளர்க்கப்படும். மேலும், இங்கு ஓராண்டில் பத்து லட்சம் பன்றிகளை கொல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து நிபுணர்கள் கவலையடைந்துள்ளனர். இதனால், கால்நடைகளுக்கு நோய்கள் பரவும் என அச்சம் உருவாகியுள்ளது.
Tags :