விஷ பூச்சி கடித்து வடமாநில வாலிபர் பலி

by Staff / 07-12-2022 02:34:35pm
விஷ பூச்சி கடித்து வடமாநில வாலிபர் பலி

ஒடிசா மாநிலம் பவாத் மாவட்டம் தாமோதர்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பிகாஸ் போக்தா (20). இவர் ஈரோடு மாவட்டம் கஸ்பாபேட்டை அடுத்த எம். எஸ். மங்கலம் கிராமத்தில் வாவி காட்டு வலசு பிரிவில் உள்ள ஒரு தனியார் மில்லி தங்கி 5 வருடமாக வேலை பார்த்து வந்தார். நிலையில் சம்பவத்தன்று பிகாஸ் போக்தாவை விஷ பூச்சி ஒன்று கடித்துவிட்டது.இதனை அடுத்து அவர் போன் மூலம் தனது அண்ணன் தரணி போக்தாவுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் சிறிது நேரத்தில் பிகாஸ் போக்தாவுக்கு வலது கை முழுவதும் வலி ஏற்பட்டு வீங்கி மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரது அண்ணன் தம்பியை மீட்டு சிகிச்சைக்காக கொல்லம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு பிகாஸ் போக்தா அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via