மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் -ஆட்சியர் அரவிந்த் அழைப்பு.

by Editor / 22-12-2022 08:28:05am
மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் -ஆட்சியர் அரவிந்த் அழைப்பு.

குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குமரி மாவட்ட மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தின்  நாஞ்சில் கூட்ட அரங்கில் நாளை ( வெள்ளிக்கிழமை ) காலை 11 மணி அளவில் நடைபெற உள்ளது. எனவே மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் இதர அரசுத்துறைகளால் நிறைவேற்றப்பட வேண்டிய மீனவர்களின் குறைகள் , கோரிக்கைகள் , தேவைகள் அடங்கிய மனுக்களை நாளை நடைபெறும் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நேரில் வழங்கிடலாம். பிற அரசு துறை சார்ந்த கோரிக்கைகளை ஒரே மனுவில் கொடுக்காமல் துறை வாரியாக தனித்தனி மனுக்களாக வழங்கிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via