மனைவியை கத்தியால் குத்திய கணவர்

by Staff / 23-12-2022 04:15:23pm
மனைவியை கத்தியால் குத்திய கணவர்

கன்னியாகுமரி மாவட்டம் பளுகல் காவல் நிலையத்துக்கு உட்பட்ட கருமானூர் வருகபிலாவிளையை சேர்ந்தவர் ராஜூவ்(37) , இவர் கேரளா மாநிலம் செங்கல் நெல்லி நிறை விளை வீட்டைச் சேர்ந்த ஷைனி(30) என்பவரை திருமணம் செய்து வருக்க பிலாவிளை வீட்டில் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 10- வயதில் ஒரு பெண் குழந்தையும் உண்டு இவர்களுக்கு கடந்த ஆறு மாத காலமாக பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஷைனி கணவரை பிரிந்து தாயாரின் வீடான நெல்லி நிறை வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முந்தினம் குழுவிற்கு பணம் கட்டுவதற்காக கணவரின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரது கணவர் ராஜூவ் தகராறில் ஈடுபட்டு தன்னுடன் வாழ விரும்பாத நீ உயிருடன் இருக்க வேண்டாம் என கூறி ஆவேசத்தில் கையில் இருந்த கத்தியால் வயற்தில் குத்தி உள்ளார். இதனால் ஷைனி வலியால் துடித்துள்ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் மீட்டு காரக்கோணம் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கிருந்து அவரை மேல் சரியாக திருவனந்தபுரம் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுகுறித்து பளுகல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via