பெண்கள் மீது துப்பாக்கிச்சூடு பரபரப்பு சம்பவம்

by Staff / 26-12-2022 11:46:09am
பெண்கள் மீது துப்பாக்கிச்சூடு பரபரப்பு சம்பவம்

பீகார் மாநிலம் சேர்ந்த பெண்கள் 1985ம் ஆண்டு நிலமற்ற தொழிலாளர்களுக்கு அரசு நிலம் வழங்கியதாகவும், அதன் ஒரு பகுதியாக இந்த நிலம் தங்களுக்கு வழங்கப்பட்டதாகவும் கூறி போராட்டம் நடத்தியுள்ளனர். இதன் பின்பு இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்றது. நீதிமன்றம் 2004 முதல் இந்த நிலத்தை முடக்கியது.
ஆனால், நேற்று காலை, முன்னாள் உரிமையாளர் ஷிஷிர் துபே, டிராக்டரைக் கொண்டு வந்து, வலுக்கட்டாயமாக வயலை உழ முயன்றார். இதற்கு பெண்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், துப்பாக்கியை எடுத்து துப்பாக்கியால் சுட்டார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து வந்தனர். அதன் பிறகு குற்றவாளி கைது செய்யப்பட்டார். துப்பாக்கிச்சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை தடயவியல் துறை ஆய்வு செய்து அதன் முடிவுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர். துப்பாக்கியால் சுடப்பட்ட பெண்கள் பெட்டியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

Tags :

Share via