சரத் குமார் யாதவ் இயற்கை எய்தினார்
சரத் யாதவ் ஐக்கிய ஜனதா தளக்கட்சியின் தேசியத்தலைவர்.மக்களவை உறுப்பினராக ஏழு முறையும் மாநிலங்களவைஉறுப்பினராக இரு முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் .1989-90 மத்திய ஜவுளி மற்றும் உணவு பதனிடும் துறை அமைச்சராக ,1999-2001 மத்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சராக,2001-2002 மத்திய தொழிலாளர் அமைச்சராக,2002-2004 நுகர்வோர்விவகாரம் மற்றும் உணவு-பொதுவிநியோக மத்திய அமைச்சராக இருந்தவர் என்பதுகுறிப்பிடத்தக்கது.சரத் யாதவ் மத்தியபிரதேச கோசாங்காபாத் மாவட்டத்திலுள்ள அக்மெள கிராமத்தில்1.7.1947 இல்நடுத்தர குடும்பத்தில் பிறந்தார். இராபர்ட்சன் கல்லூரியிலும் ஜபல்பூர் பொறியியல் கல்லூரியிலும் பயின்றவர்.மண்டல்கமிஷன் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகித்தவர்.இவர்மனைவி டாக்டர் ரேகா,டாக்டர் ராம் மனோகர் லோகியாவின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவர். தற்பொழுது பீகார் சார்பாக நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக உள்ளார் .லல்லு பிரசாத்யாதவ் ,நிதிஷ்குமார், சோனியா காந்தி போன்றோருடன் நெருங்கிய தோழமை உடையவராக இருந்தவர்
Tags :