இடைத்தேர்தலில் பாமக யாருக்கும் ஆதரவு இல்லை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடவில்லை என்றும், யாருக்கும் ஆதரவு இல்லை எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.இன்று மாலை பாமக தலைவர்களை சந்தித்து ஆதரவு கோர ஓ. பன்னீர்செல்வம் திட்டமிட்டிருந்த நிலையில், யாருக்கும் ஆதரவு இல்லை என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. தற்போது, திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ், அதிமுக கூட்டணியில் அதிமுகவும், அமமுக, நாம் தமிழர் கட்சிகள் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags :