பைக் மோதிய விபத்தில் இருவர் பலி

by Staff / 02-02-2023 04:21:08pm
பைக் மோதிய விபத்தில் இருவர் பலி

கோவை மாவட்டம் குளத்துப்பாளையம் கே. பி. ஆர். காலனியை சேர்ந்தவர் 51 வயதான கருப்புசாமி, சவரத் தொழிலாளியான இவர், இரு தினங்களுக்கு முன் இரவு, தனது நண்பர் 34 வயதான ராஜேஷ்குமார், என்பவருடன் மொபட்டில் சென்று கொண்டிருந்ததாக தெரிகிறது. பாலக்காடு மெயின் ரோடு, குளத்துப்பாளையம் சந்திப்பு அருகே, பைக் மோதியதில், கருப்புசாமி மற்றும் ராஜேஷ்குமார் துாக்கி வீசப்பட்டனர். பைக்கில் வந்த கோவைப்புதுார் அறிவொளி நகரை சேர்ந்த கூலித்தொழிலாளி கோபிநாத், (வயது 20), பாலக்காடு ஒட்டப்பாளையத்தை சேர்ந்த ராஜேஷ்குமார், 34, கோவை மாச்சம்பாளையத்தை சேர்ந்த 19 வயதான ஹூசைன் ஆகிய மூவரும் கீழே விழுந்தனர். படுகாயமடைந்த ஐந்து பேரையும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மருத்துவமனை செல்லும் வழியிலேயே கருப்புசாமி உயிரிழந்தார். சிகிச்சை பெற்று வந்த கோபிநாத் நேற்று உயிரிழந்தார். மற்றவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநகர மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via