வயிற்று வலியால் பெண் தூக்கு போட்டு தற்கொலை
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவருடைய மனைவி சித்ரா இவருக்கு கடந்த ஓராண்டாக தீராத வயிற்று வலி இருந்துள்ளது. இதனால் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் சரியாகவில்லையாம். இதனால் மனமுடைந்து காணப்பட்ட சித்ரா சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். இதைக்கண்ட உறவினர்கள் சித்ராவை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சித்ரா பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைகாக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தற்கொலை குறித்த புகாரின்பேரில் தாந்தோணிமலை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags :