ராமேசுவரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை

by Editor / 04-07-2021 05:42:50pm
ராமேசுவரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை

ராமேசுவரத்தில் இருந்து 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

அவர்கள் வழக்கம் போல் கச்சத்தீவு கடலோர பகுதியில் கடலில் மீன்பிடி வலைகளை விரித்து மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு அதிநவீன பிளாஸ்டிக் படகில் இலங்கை கடற்படையினர் ரோந்து வந்தனர்.

அவர்கள் அங்கு மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களை, இந்த பகுதியில் மீன் பிடிக்கக்கூடாது. உடனடியாக இங்கிருந்து செல்லுங்கள் என எச்சரித்தனர்.இலங்கை கடற்படையின் எச்சரிக்கையை தொடர்ந்து மீனவர்கள் படகுகளை மாற்றுப்பகுதிக்கு செல்ல முயற்சித்தனர். அப்போது இலங்கை கடற்படையினர் திடீரென மீனவர்களின் மீன்பிடி வலைகளை வெட்டி எறிந்து தாக்குதலில் ஈடுபட்டனர்.இதனால் மீனவர்கள் உயிருக்கு பயந்து அங்கிருந்து அவசர அவசரமாக படகுகளில் புறப்பட்டு வந்தனர்.இந்த தாக்குதல் குறித்து கரை திரும்பிய மீனவர்கள் கூறுகையில், ஏறத்தாழ 50-க்கும் மேற்பட்ட படகில் இருந்த மீன்பிடி வலைகளை இலங்கை கடற்படையினர் வெட்டி கடலில் வீசி விட்டனர்.

 

Tags :

Share via