ரவுடி மீது போலீசார் துப்பாக்கி சூடு

by Staff / 28-02-2023 12:23:44pm
ரவுடி மீது போலீசார் துப்பாக்கி சூடு

மதுரை வண்டியூரை சேர்ந்தவர் வினோத். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் கடந்த வாரம் வளர்நகர் பகுதியில் நடந்த டோரா பாலு என்ற ரவுடி கொலை வழக்கில் தொடர்புடையவர். மாட்டுத்தாவணியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசார் அங்கு வந்த வினோத்தை விசாரித்துள்ளனர். தொடர்ந்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. போலீசாரிடம் இருந்து தப்பிக்க வினோத் மறைத்து வைத்திருந்த அறிவாளால் போலீசாரை தாக்க முயன்றுள்ளார். போலீசார் தற்காப்புக்காக வினோத்தை காலில் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் காயம் அடைந்த வினோத் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via