3 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலி

by Staff / 28-02-2023 12:29:30pm
3 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் அதிவேகமாக வந்த கார் சைக்கிளில் சென்ற பள்ளி மாணவர்கள் மீது மோதியதில் மூன்று மாணவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் சைக்கிளில் மூன்று மாணவர்கள் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக அதிவேகமாக வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே மூன்று மாணவர்களும் உயிரிழந்தனர். உடனே தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாணவர்களின் சடலங்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

 

Tags :

Share via