இரானுவத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி
கோவை: தேனியை சேர்ந்தவர், 30 வயதான அழகு ராஜா, இவரது, பக்கத்து ஊர் காரரான தாமோதரன் என்பவர்மூலமாக, கோவை சரவணம்பட்டி அடுத்த சின்ன மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சுஜாதா, மதுமோகன், ரவி, மனோஜ்பிரபாகர், ராஜேஷ்வரி ஆகியொர், அறிமுகமாகி உள்ளனர், இவர்கள் ஐந்து பேரும் சேர்ந்து அழகுராஜாவின் உறவினர்களான, அபினாஷ், சத்தியசீலன், தாமோதரன் ஆகிய மூவருக்கும் இரானுவத்தில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளனர் இதனை உண்மை என நம்பிய அழகுராஜா, கடந்த 19. 05. 22 அன்று குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரிடமும், முதல் தவணையாக ரூ. 19, 50, 000, பணத்தை கொடுத்துள்ளார், அழகுராஜா, அதன் பிறகு மீண்டும் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரும், மீண்டும் பணம் கேட்டதால், மீண்டும் 16, 50, 000 ரூபாயை வழங்கியுள்ளார், ஆனால், குற்றம் சாட்ட பட்ட ஐந்து பேரும், வாக்குறுதி அளித்தபடி, இராணுவத்தில் மூவருக்கும் வேலை வாங்கி தரவில்லை இதனை தொடர்ந்து வேலைக்காக வழங்கபட்ட 36 லட்சம் பணத்தை திருப்பி அழகுராஜா கேட்டுள்ளார், அப்பொழுது அவர்கள் ஐந்து பேரும், 5, 15, 000/- பணத்தை மட்டும் திருப்பி தந்துள்ளனர், இதனை தொடர்ந்து அழகுராஜா இது குறித்து நேற்று சரவணம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார், புகாரின் பேரில் இராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 30 லட்சத்து 85 ஆயிரம் பணத்தை ஏமாற்றிய சுஜாதா, மதுமோகன், மனோஜ் பிரபாகர், ரவி, ராஜேஷ்வரி ஆகிய ஐந்து பேரை தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :