இந்தியன் ஆயில் நிறுவன வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் அதிகரிப்பு-மக்கள் அதிர்ச்சி 

by Editor / 01-03-2023 09:45:36am
இந்தியன் ஆயில் நிறுவன வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் அதிகரிப்பு-மக்கள் அதிர்ச்சி 

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருட்களின் விலையை நிர்ணயம் செய்கின்றன. அதன்படி இந்தியன் ஆயில் நிறுவனம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ.50 உயர்த்தி இன்று அறிவித்துள்ளது. இது இன்று நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.

சென்னையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.1068.50க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்று சிலிண்டர் விலை ரூ.50 அதிகரித்துள்ளதால் சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலையானது ரூ.1118.50 ஆக அதிகரித்துள்ளது.இதேபோல், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் 1070.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 1120.50 ரூபாயாக அதிகரித்துள்ளது.

கடந்த 3 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் திடீரென ரூ.50 அதிகரித்துள்ளது குடும்ப தலைவிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


 

 

Tags :

Share via