தபால் நிலைய பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது.

by Staff / 01-03-2023 03:15:16pm
தபால் நிலைய பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது.

மதுரை பசுமலை புது அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் பத்மநாபன் (59) என்பவர் மதுரை மீனாட்சி பஜார் தலைமை தபால் அலுவலகத்தில் எம். டி. எஸ். பிரிவில் வேலை பார்த்து வருகிறார். இதே அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பெண் ஊழியரிடம் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்
பெண் ஊழியர் பலமுறை அவரை எச்சரித்தும் பத்மநாபன் கேட்கவில்லை. தொடர்ந்து பெண் ஊழியரிடம் தொல்லை செய்து வந்துள்ளார்.இதனால் பெண் ஊழியர் இந்த சம்பவம் குறித்து தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு பத்மநாபனை போலீசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via