50 பேருக்கு போலி கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியா ஹரீஸ் கைது.
பிப். 26ம் தேதி, நகைச்சுவை நடிகர் வடிவேலு, இசையமைப்பாளர் தேவா உள்ளிட்ட 50 பேருக்கு போலி கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அவை அனைத்தும் போலியானவை என தெரிய வந்ததை அடுத்து, அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் அளித்த புகாரின் அடிப்படையில் 7 பிரிவுகளின் கீழ் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, போலி டாக்டர் பட்டம் வழங்கிய ஹரீஷை தேடி வந்தனர். இந்நிலையில் அவர் ஆம்பூர் அருகே கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் சேர்த்து இடைத்தரகர் கருப்பையா என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
Tags :