வ உ சி கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்

by Staff / 14-03-2023 03:03:12pm
வ உ சி கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்

தூத்துக்குடி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. சான்றிதழ் பெற 500 ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாய் பேப்பர் ரீவேல்யூசன் கட்டணம் 350 ரூபாயில் இருந்து 550 உயர்த்தப்பட்டுள்ளது தடையில்லா சான்று வாங்குவதற்கான கட்டடனம் 5 ஆயிரத்திலிருந்து பத்தாயிரம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது இவ்வாறு கட்டணங்கள்
பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது இதன் காரணமாக கல்லூரி படிப்பு படிக்கும் சாதாரண ஏழை எளிய மாணவ மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதை தொடர்ந்து தூத்துக்குடியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் கல்வி கட்டணத்தை உயர்த்திய உயர் கல்வித்துறை மற்றும் மனோன்ம சுந்தரனார் பல்கலைகழகத்தை கண்டித்து மாணவ மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற இந்த போராட்டத்தில் மாணவர் மாணவிகள் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via