கட்டிடம் இடிந்து 8 பேர் பலி

by Staff / 17-03-2023 02:27:59pm
கட்டிடம் இடிந்து 8 பேர் பலி

உத்தரபிரதேசத்தில் நடந்த பயங்கர விபத்தில் சிக்கி 8 பேர் பலியாயினர். சம்பல் மாவட்டத்தில் உள்ள குளிர்பதனக் கிடங்கு ஒன்றின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர். மேலும் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த சம்பவம் குறித்த முழு விவரம் இன்னும் தெரியவரவில்லை. சம்பவ இடத்தில் மோப்ப நாய் உதவியுடன் தேடுதல் பணி நடக்கிறது.
 

 

Tags :

Share via