ரூ.1 கோடி மதிப்பிலான பனியன் ரோல்கள் எரிந்து நாசம்

by Staff / 12-07-2024 11:55:06am
ரூ.1 கோடி மதிப்பிலான பனியன் ரோல்கள் எரிந்து நாசம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பழைய பனியன் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான பனியன் ரோல்கள் எரிந்து நாசமாகின. எரிந்த பனியன் துணிகளை ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. குடோனுக்கு அருகே இயங்கி வந்த நூல் தயாரிக்கும் ஆலையில் முறையான பாதுகாப்பு வசதிகள் இல்லாததே தீ விபத்திற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

Tags :

Share via