கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறு மனைவி தீக்குளித்து பலி
மதுராந்தகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மதுராந்தகம் தேரடி தெருவில் வசிக்கும் மகேந்திரன் வ/58 என்பவர் தினமும் குடித்துவிட்டு அவரது மனைவியிடம் சண்டை போட்டு வந்ததாகவும் 15. 3. 2023 அன்று 22. 30 மணியளவில் குடித்துவிட்டு வந்து பிரச்சினை செய்தபோது அவரது மனைவி வசந்தா வ/48 தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாகவும், அவரை அணைக்க முற்பட்டு மகேந்திரன் என்பவருக்கும் தீக்காயம் ஏற்பட்டு செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததில், வசந்தா என்பவர் உயிரிழந்து விட்டதாக கொடுத்த புகாரின் பேரில் மதுராந்த காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்து வருகின்றன.
Tags :