கள்ளச்சாராயம் கடத்திய வாலிபர் கைது.

by Editor / 02-04-2023 09:21:58am
கள்ளச்சாராயம் கடத்திய வாலிபர் கைது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த குரைக்காவாடி கிராமம் அருகே சேலம் மாவட்டத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் நான்கு லாரி ட்யூப் களில் 120 லிட்டர் கள்ளச்சாராயம் கடத்தி வந்த சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த இராமசேசபுரம் பகுதியைச் சேர்ந்த அருள் (34) இளைஞரை ராமநத்தம் போலீசார் மடக்கி 
பிடிக்க சென்ற இடத்தில் அருள் இருசக்கர வாகனத்தை போட்டு விட்டு தப்பி செல்ல முயன்ற போது விரட்டி பிடித்ததில் ராமநத்தம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கலியமூர்த்தி, காவலர்கள் ஆனந்த ரட்சகன், ஜெயபிரகாஷ் ஆகிய மூன்று போலீசாருக்கு சிறு காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சக்கு அனுமதிக்கப்பட்டனர்.அருளிடமிருந்து இருசக்கர வாகனம் மற்றும் 120 லிட்டர் கள்ள சாராயம் பறிமுதல் செய்து நடவடிக்கை.
 

 

Tags :

Share via