டாக்டர் மர்ம மரணம்

by Staff / 02-04-2023 01:17:05pm
 டாக்டர் மர்ம மரணம்

சேலம் நகரமலை அடிவாரத்தில் கோல்டன் வேல்யூ குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் ரங்கநாதன் (வயது 45) என்பவர் வசித்து வந்தார். இவர், சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பல் டாக்டராக பணியாற்றி வந்துள்ளார்.இவரது மனைவியும் பல் டாக்டராக உள்ளார். இவர்களுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. ரங்கநாதனின் மனைவி மருத்துவ சிகிச்சைக்காக சென்னையில் உள்ளார். சேலத்தில் ரங்கநாதன் தனது தாயுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அவர், வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து தூங்கினார். நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் அவரது அறை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவருடைய தாய் அறைக்குள் சென்று பார்த்தபோது ரங்கநாதன் கட்டிலில் இருந்து கீழே விழுந்து கிடந்தார். வாயில் ரத்தம் வடிந்தநிலையில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த அழகாபுரம் போலீசார் ரங்கநாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பல் டாக்டர் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது. அவரது சாவு குறித்து அழகாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via