இட்லி சாப்பிட்டவர் பலி - 4 பேர் மருத்துவமனையில் அனுமதி

by Staff / 03-04-2023 12:38:09pm
இட்லி சாப்பிட்டவர் பலி - 4 பேர் மருத்துவமனையில் அனுமதி

கேரளா மாநிலம் திருச்சூரில் சுசீந்திரன் என்பவர் வீட்டில் நேற்று காலை இட்லி சமைத்துள்ளனர். இதனை, சுசீந்திரன், அவருடைய மனைவி கீதா, தாயார் கமலா, தொழிலாளர்களான ஸ்ரீராமச்சந்திரன், அவரது மனைவி, தாய் மற்றும் இரண்டு தென்னை மரம்  ஏறும் தொழிலாளர்கள் உள்ளிட்ட 5 பேரும் சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட சிறிது நேரத்தில் சுசீந்திரன் ரத்த வாந்தி எடுத்திருக்கிறார். தொடர்ந்து 5 பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி சுசீந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் உணவில் விஷம் கலக்கப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via